அடக்க முடியாத செக்ஸ் வெறியால் அவதிப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
ரக்கா: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களின் செக்ஸ் திறனை மேம்படுத்த சிகிச்சை பெற்று மனைவிகளுடன் கொடுரமாக, இயற்கைக்கு புறம்பான வகையில் உறவு கொள்கின்றனர் என்று டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருகின்றனர். அண்மையில் அவர்கள் எகிப்தைச் சேர்ந்த 21 கிறிஸ்தவர்களை தலையை துண்டித்து கொலை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளின் மறுபக்கம் பற்றி தெரிய வந்துள்ளது.
உள்ளாடை
தீவிரவாதிகள் தங்களின் மனைவிகள் மற்றும் கடத்தி வரப்பட்ட சிறுமிகள், பெண்களுக்கு அழகிய உள்ளாடைகள் வாங்கிக் கொடுக்க தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை செலவு செய்கிறார்களாம்.
செக்ஸ் அடிமைகள்
தீவிரவாதிகள் தாங்கள் கடத்தி வரும் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை சிறிது காலம் செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்துவிட்டு பின்னர் அவர்களை சந்தையில் விற்றுவிடுகிறார்கள்.
ஆசை
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பலருக்கு செக்ஸ் பிரச்சனை உள்ளது. மேலும் அவர்களுக்கு செக்ஸ் ஆசை அதிகமாகவும் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
முரட்டுத்தனம்
தீவிரவாதிகள் முரட்டுத்தனமாகவும், இயற்கைக்கு புறம்பாகவும் உறவு கொள்வதால் பல பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சுகிறார்கள்.
மொசுல்
ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் நகரங்களில் வசிக்கும் பெண்கள் வெளியே செல்கையில் பர்தா அணிந்து, முகத்தை மறைத்து, கையுறை அணிந்து ஒரு ஆணை துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமாம்.