Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசா அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து.. எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

எகிப்து: காசாவில் அமைதியை நிலை நிறுத்துவது தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் போடப்படவுள்ளது. எகிப்த் நாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் நாடு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்திற்கும் - ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயரிந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தும், வீடுகளை இழந்தும் தவித்து வருகிறார்கள். காசா மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் நீண்டு வருகிறது.

Israel Gaza

எகிப்தில் பேச்சுவார்த்தை

காசா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காசாவில் அமைதியை கொண்டு வருவதற்காக, டிரம்ப் 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தை வெளியிட்டிருந்தார். இதனை ஏற்பதாக இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இதன்படி கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் காசா அமைதி ஒப்பந்தம் எகிப்து நாட்டில் இன்று கையெழுத்தாகிறது. அப்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சி.சி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை

இதில் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படஇருக்கிறது. காசாவில் அமைதி திரும்பியுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக 200 க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு டிரம்ப் இஸ்ரேல் செல்ல உள்ளார். அங்கு அவர் பிணைக் கைதிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையொட்டி இஸ்ரேலிடம் உள்ள சுமார் 2,000 பிணைக் கைதிகளும், ஹமாஸிடம் உள்ள 20 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காசாவில் நிரந்தரமாக அமைதி நிலவ வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பிரதமர் மோடிக்கு அழைப்பு

வராலாற்று முக்கியத்துவம் மிக்க காசா அமைதி ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பிரமதர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் சார்பில் மத்திய அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+