அவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை!
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலத்தீன போராளி குழுவான பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
ஜெருசலேம்: காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலத்தீன போராளி குழுவான பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் காஸா இடையிலான போர் மீண்டும் உச்சம் அடைந்து இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மதியத்தில் இருந்து இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு அருகேவும், பாலஸ்தீனத்திற்கு இடப்புறமும் இருக்கும் காசா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது. காஸாவில் உள்ள போராளி குழுக்களும் சரமாரியாக இந்த தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தி வருகிறது.

யார் தாக்கியது
இஸ்ரேலுக்கு எதிராக காஸாவில் செயல்படும் ஹமாஸ் போராளி குழுதான் பொதுவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும். ஆனால் அந்த முறை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது பாலத்தீன போராளி குழுவான பிஐஏ எனப்படும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் என்ற அமைப்பு ஆகும். ஹமாஸ் குழுவின் இணை இயக்கமாக இது பார்க்கப்படுகிறது.

முதல் தாக்குதல்
இந்த தாக்குதலை இரண்டு தரப்பில் முதலில் யார் நடத்தியது என்ற விவரம் வெளியாகவில்லை. இஸ்ரேல் மொத்தம் 200 ராக்கெட்டுகளை காஸா மீதி வீசி மிக கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார். இஸ்ரேல் மீது நடக்கும் தாக்குதலுக்கு பொதுவாக இவர்தான் மாஸ்டர் மைண்ட் என்கிறார்கள்.

அதிரடி
இஸ்ரேல் நாட்டின் இஸ்ரேல் டிபன்ஸ் போர்ஸ் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் முறையில், காஸா எல்லைக்குள் சென்று இஸ்ரேல் படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. காஸாவில் இருந்த மிக முக்கியமான போராளிகள் பயன்படுத்தும் குகை இதனால் அழைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல்
அதேபோல் காஸாவில் இந்த போராளி குழுக்கள் வைத்திருந்த முக்கியமான தலைமையிடம் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது அவர்கள் குகை வழியாக வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதால், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில்தான் பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார்.

தீவிர தேடல்
அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகள் எல்லாம் பாஹா அபு அல் அதாவை பல வருடங்களாக தேடி வந்தது. காஸா போரில் மிக முக்கியமான நபராக பாஹா அபு அல் அதா பார்க்கப்பட்டார். தற்போது அவருடன் அவரின் தளபதி, மனைவி, குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெரிய பதற்றம்
இதனால் தற்போது இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு வீச்சில் போர் நடப்பதற்கான ஏற்பாடுகளும், சூழ்நிலைகளும் அங்கே உருவாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications