யூத- முஸ்லீம் கலப்பு திருமணம்: இஸ்ரேல் மக்கள் போராட்டம்
காஸா: இஸ்ரேலில் போர்பதற்றமான சூழ்நிலையில் யூதப்பெண் ஒருவர் முஸ்லீம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்பட்டது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் எல்லையோரம் உள்ள காஸாவில் வாழும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் நாட்டினருக்குமிடையில் பகை நிலவி வருகிறது. இது தவிர, இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி வாழும் பாலஸ்தீனிய முஸ்லிம்களையும் இஸ்ரேலியர்கள் தங்களது ஜென்ம எதிரிகளாக கருதி வருகின்றனர்.
சமீபத்தில், இஸ்ரேலிய மாணவர்கள் 3 பேரை கடத்திக் கொன்றது தொடர்பாக காஸா பகுதி மீது சுமார் 40 நாட்கள் இஸ்ரேலின் முப்படைகளும் நடத்திய தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கும் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டது.
எகிப்து அதிபரின் தலையீட்டின் பேரில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் கெய்ரோவில் தற்போது இரண்டாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சேர்ந்த மரல் மல்க்கா(23) என்ற யூதப் பெண்ணுக்கும், மஹ்மவ்ட் மன்சவுர்(26) என்ற இஸ்லாமிய இளைஞருக்கும் நேற்று ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
யூத மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய மரல் மல்க்கா முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் செய்தி காட்டுத்தீ போல டெல் அவிவ் நகருக்குள் பரவியது. இதையறிந்து, மண்டபத்தின் அருகே திரண்டு வந்த சுமார் 200 யூத ஆண்களும், பெண்களும் உள்ளே நுழைந்து இந்த திருமணத்தை தடுக்க முயன்றனர்.
இந்த செய்தி அறிந்து அங்கு வந்த போலீசாரும், ராணுவத்தினரும் அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர்.
இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைச்சர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்த திருமணம் திட்டமிட்டபடி நடந்து முடிந்ததும், வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணமக்களை சபித்தனர். அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இஸ்ரேல் நாட்டின் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்தினர் அரபு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications