Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சள் கோட்டை கடந்தால் மரணம்.. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் புது ரூல்ஸ்! இதுதான் போர் நிறுத்தமா?

Subscribe to Oneindia Tamil

காசா: பாலஸ்தீனத்தில் டிரம்ப் தலையீட்டால் போர் நிறுத்தம் சாத்தியமானதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலிய ராணுவத்தினர் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது, இஸ்ரேலிய ராணுவம், காசாவின் தெற்கில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் மஞ்சள் கோட்டை கடப்பவர்களை கொலை செய்து வருகிறது. சாலையில் போடப்படுவதை போல கண்ணுக்கு தெரியும் வகையில் இந்த கோடு இருக்காது. மாறாக செயற்கைக்கோள் படங்களில் இந்த கோடு தெரியும். எனவே இதை பார்க்க முடியாமல், கோட்டை கடக்கும் பாலஸ்தீன மக்கள் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Israel Gaza Palestine

போர் நிறுத்தம் காரணமாக இஸ்ரேலியப் படைகள் மஞ்சள் கோட்டிற்குப் பின்னால் நகர்ந்துள்ளன. அங்கு செயற்கைக்கோள் படங்கள் சுமார் 40 செயலில் உள்ள இராணுவ நிலைகளை காட்டுவதாகத் தெரிகிறது. ஆனால், இந்த எல்லை எங்குள்ளது என்று தங்களுக்குத் தெரியாததால், மரண அபாயங்களை எதிர்கொள்வதாக பாலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர். காசா பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பகுதியை இஸ்ரேல் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் 58% காசா நிலப்பரப்பு இன்னமும் இஸ்ரேல் பிடியில்தான் இருக்கிறது.

துப்பாக்கிச்சூடு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபுறம், பாலஸ்தீன குடியிருப்புகளை இடித்து தள்ளும் பணிகளையும் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' ஆவணப்படத்தில் இடம்பெற்ற மசாபர் யாட்டாவில் பல பாலஸ்தீனிய வீடுகளையும், கால்நடை கொட்டகைகளையும் இஸ்ரேலிய படைகள் இடித்து தள்ளியிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய இராணுவ மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த அத்து மீறல் நடந்திருக்கிறது.

ஹெப்ரான் வடக்கில் உள்ள பெய்ட் உம்மார் நகரில் 38,000 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தை பறிமுதல் செய்ய இஸ்ரேலியப் படைகள் இராணுவ உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலப்பகுதிகள் பல குடும்பங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்கள், பாதாம் மரங்கள் மற்றும் ஆலிவ் மரங்கள் உள்ளன. இது பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

காசாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை, வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் நேரடித் துப்பாக்கிச் சூடு மூலம் இஸ்ரேல் குறைந்தது 282 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என தெரிய வந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+