மசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே!
Recommended Video

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மகன் மற்றும் சகோதரர் உட்பட 44 பேரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 14ஆம் தேதி தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

கடும் நெருக்கடி
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர் .

44 தீவிரவாதிகள் கைது
இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மகன் ஹமாத் அசார் மற்றும் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூப், மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல அமைப்புகளுக்கு தடை
மேலும், ஜமாத்-உத்-தவா மற்றும் ஃபாலா-இ-இன்சனிட் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

நடவடிக்கை தொடரும்
இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

இந்தியா கேள்வி
எனினும், புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யாதது ஏன் என்று இந்தியா கேள்வி எழுப்பி உள்ளது. எனவே, அமைதியை விரும்புவது போன்று சர்வதேச நாடுகளை சமாளிக்க பாகிஸ்தான் நடத்தியுள்ள மற்றொரு கண்துடைப்பு நாடகம் என்று கூறப்படுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications