பல லட்சம் கிமீ வேகத்தில் சுற்றிய விண்கல்.. 2 ரோபோட்களை இறக்கி அசத்திய ஜப்பான்.. ஏன் தெரியுமா?
ஜப்பானை சேர்ந்த ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் ரோவர் போல செயல்படும் ரோபோக்களை இறக்கி சாதனை செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் ரோவர் போல செயல்படும் ரோபோக்களை இறக்கி சாதனை செய்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த நாசா செவ்வாய் கிரகத்தில் ரோவரை பல வருடங்களுக்கு முன்பே வெற்றிகரமாக இறக்கியது. ரோபோ போல இருக்கும் இந்த கியூரியாசிட்டி ரோவர் அங்கு பல வருடமாக சோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ரோபோ போலவே செயல்படும், இரண்டு ரோவர்களை வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் இறக்கி இருக்கிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இந்த சாதனையை செய்துள்ளனர்.

விண்கல்லில் இறக்கினார்கள்
பூமிக்கு மிக அருகில் தனியாக அதிவேகமாக சுற்றி வரும் ''ரைகு'' என்ற விண்கல்லில் இந்த இரண்டு ரோவர்களை இறக்கி இருக்கிறார்கள். ஹயபுஸா 2 என்ற ஸ்பேஸ்கிராப்ட் மூலம் அனுப்பப்பட்ட மினெர்வா 112 (MINERVA-II1) என்ற பெயர் கொண்ட இரண்டு ரோவர்களை விண்கல்லில் இறக்கி இருக்கிறார்கள். உலகில் முதல் முறை இப்படி ரோவர்கள் விண்கல் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அருகில் சுற்றிக் கொண்டு இருந்தது
இந்த ஹயபுஸா 2 என்ற ஸ்பேஸ்கிராப்ட் மூலம் முதலில் ரைகு விண்கல்லுக்கு மிக அருகில் சென்று இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 கிமீ அருகே வரை சென்று வேகமாக சுற்றி இருக்கிறார்கள். அந்த ரைகு விண்கல்லை வேக வேகமாக இந்த ஹயபுஸா 2 சுற்றி இருக்கிறது. அதன்பின் குறிப்பிட்ட நேரம் கழித்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை அருகே சென்று இருக்கிறது இந்த ஹயபுஸா 2.

எப்படி இறக்கினார்கள்
பின் வரிசையாக ஒவ்வொரு ரோவராக இரண்டு ரோவரையும் தரையிறக்கினார்கள். முதலில் ஒரு ரோவர் மெதுவாக தரையிறங்கியது. அடுத்த ரோவர் அதை பின் தொடர்ந்தது. இன்னொரு ரோவர் அடுத்த மாத தொடக்கத்தில் அங்கு இறங்க உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு இந்த ரோவர்கள் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யும்.

ஏன் தெரியுமா
இந்த ரைகு விண்கல்லுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று கேட்கலாம். இதில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் உலகம் எப்படி உருவானது, எப்படி உயிர்கள் உருவானது என்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். அதேபோல் வேற்றுலக உயிர்கள் குறித்த முக்கிய முடிவிற்கும் வரலாம் என்கிறார்கள்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications