பல லட்சம் கிமீ வேகத்தில் சுற்றிய விண்கல்.. 2 ரோபோட்களை இறக்கி அசத்திய ஜப்பான்.. ஏன் தெரியுமா?
ஜப்பானை சேர்ந்த ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் ரோவர் போல செயல்படும் ரோபோக்களை இறக்கி சாதனை செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் ரோவர் போல செயல்படும் ரோபோக்களை இறக்கி சாதனை செய்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த நாசா செவ்வாய் கிரகத்தில் ரோவரை பல வருடங்களுக்கு முன்பே வெற்றிகரமாக இறக்கியது. ரோபோ போல இருக்கும் இந்த கியூரியாசிட்டி ரோவர் அங்கு பல வருடமாக சோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ரோபோ போலவே செயல்படும், இரண்டு ரோவர்களை வேகமாக செல்லும் விண்கல் ஒன்றில் இறக்கி இருக்கிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். ஜக்சா விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இந்த சாதனையை செய்துள்ளனர்.

விண்கல்லில் இறக்கினார்கள்
பூமிக்கு மிக அருகில் தனியாக அதிவேகமாக சுற்றி வரும் ''ரைகு'' என்ற விண்கல்லில் இந்த இரண்டு ரோவர்களை இறக்கி இருக்கிறார்கள். ஹயபுஸா 2 என்ற ஸ்பேஸ்கிராப்ட் மூலம் அனுப்பப்பட்ட மினெர்வா 112 (MINERVA-II1) என்ற பெயர் கொண்ட இரண்டு ரோவர்களை விண்கல்லில் இறக்கி இருக்கிறார்கள். உலகில் முதல் முறை இப்படி ரோவர்கள் விண்கல் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அருகில் சுற்றிக் கொண்டு இருந்தது
இந்த ஹயபுஸா 2 என்ற ஸ்பேஸ்கிராப்ட் மூலம் முதலில் ரைகு விண்கல்லுக்கு மிக அருகில் சென்று இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 கிமீ அருகே வரை சென்று வேகமாக சுற்றி இருக்கிறார்கள். அந்த ரைகு விண்கல்லை வேக வேகமாக இந்த ஹயபுஸா 2 சுற்றி இருக்கிறது. அதன்பின் குறிப்பிட்ட நேரம் கழித்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை அருகே சென்று இருக்கிறது இந்த ஹயபுஸா 2.

எப்படி இறக்கினார்கள்
பின் வரிசையாக ஒவ்வொரு ரோவராக இரண்டு ரோவரையும் தரையிறக்கினார்கள். முதலில் ஒரு ரோவர் மெதுவாக தரையிறங்கியது. அடுத்த ரோவர் அதை பின் தொடர்ந்தது. இன்னொரு ரோவர் அடுத்த மாத தொடக்கத்தில் அங்கு இறங்க உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு இந்த ரோவர்கள் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யும்.

ஏன் தெரியுமா
இந்த ரைகு விண்கல்லுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று கேட்கலாம். இதில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் உலகம் எப்படி உருவானது, எப்படி உயிர்கள் உருவானது என்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். அதேபோல் வேற்றுலக உயிர்கள் குறித்த முக்கிய முடிவிற்கும் வரலாம் என்கிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications