ஜப்பானுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் வேட்டை தீவிரம்! பயணிகளின் கதி என்ன!
டோக்கியோ: ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே சென்ற போது மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு ஜப்பான். அதிநவீன தொழில்நுட்பங்களுக்குச் சொந்தமான ஜப்பானுக்கு வலிமையான ராணுவமும் இருக்கிறது.
இந்தியாவைப் போலவே ஜப்பானுக்குச் சொந்தமான சில தீவுகளிலும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே சென்ற போது மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாயமான இந்த ஹெலிகாப்டரில் 10 பேர் பயணித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.. விமானம் மாலை 4:30 மணியளவில் காணாமல் போனதாகவும் அதன் பின்னர் ரேடரில் அது தென்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்த ஹெலிகாப்டர் இப்போது எங்கே இருக்கிறது.. அதன் நிலை என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது.
மாயமான ஹெலிகாப்டர் தெற்கு குமாமோட்டோ பிராந்தியத்தில் உள்ள ராணுவப் படைக்குச் சொந்தமானதாகும். ஒகினாவாவின் மியாகோ தீவில் இருந்து மாலை 4:00 மணிக்குப் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் ஒரு மணி நேரத்தில் திரும்ப இருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் பயணித்தோரைக் காப்பாற்றும் முயற்சியில் ஜப்பான் படைகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications