இதுவும் கூட தாய்மைதானே!
ஒக்கினாவா, ஜப்பான்: தாய்மை போற்றி வணங்கப் படக் கூடியது.. இதோ இதுவும் கூட தாய்மைதான். இந்த ஜப்பானியப் பெண்ணின் செயலைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் சொல்லத் தோன்றும்.
ஜப்பானின் ஒக்கினாவா நகரில் தாக்கிய புயலின் போது எல்லோரும் எதை எதையோ காக்க ஓட ஒரு பெண்மணி மட்டும் பப்பாளி மரத்தை பிடித்து தொங்கி கொண்டிருந்திருக்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அல்ல, அந்த பப்பாளி மரத்தை காப்பாற்றிக் கொள்ள என்பது தான் இதில் விசித்திரம். வாருங்கள் என்ன நடந்தது என்று பாப்போம்.

அந்த பெண்மணி தன் வீட்டு தோட்டத்தில் ஆசை ஆசையாக ஒரு பப்பாளி மரத்தை நட்டு இரண்டு வருடமாக அக்கறையாக வளர்த்து வந்திருக்கிறார். அன்று அவரது நகரை புயல் தாக்கியது. பலத்த காற்றுடன் கன மழை. தனது பப்பாளி மரத்திறகு ஆபத்து என்று அறிந்ததும் அவருக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. மரத்திடம் ஓடினார். அது விழந்து விடக் கூடாதே என்பது மட்டும்தான் அவருக்குத் தோன்றியிருக்கிறது.
ஜப்பானில் ஒரு புயலின் போது....
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 29, 2017
தான் ஆசையாக வளர்த்த பப்பாளி மரத்தை பாதுகாத்த பெண்மணி👏👏👏 pic.twitter.com/yxpKZqMvvD
வீசும் புயல் காற்றில் தன ஆசை பப்பாளி மரம் விழுந்து விடக்கூடாது என நினைத்து ஒரு துள்ளு துள்ளி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். காற்றின் வேகம் கூட கூட தனக்கு என்ன ஆகுமோ என்று நினைக்காமல் ஐயோ என் ஆசை மரம் சரிந்து விழுந்துவிடக் கூடாதே என்று அதை இறுக்கப் பிடித்து கொண்டார்.
காற்றில் மரம் ஆட ஆட அப்பெண்ணின் பாசக் கூக்குரலோடு புயல் சத்தமும் சேர்ந்து ஒலிக்கும் வீடியோவை பாருங்கள். அந்தப் பெண் கையை அசைத்து உதவிக்கு கூப்பிடும் ஜப்பான் மொழி புரியாமல் இருந்தாலும் அப்பெண்மணியின் முகத்தில் தெரியும் அன்பு மொழி மனதை உருக்குகிறது.
இருக்கும் மரத்தை வெட்டும் உலகில் இப்படிப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கு. இதயத்தில் ஈரம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல் நம் மூதாதையர் வளர்த்த மரத்தையும் தாய் தந்தை வளர்த்த மரத்தையும் கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் சதக் சதக்கென வெட்டி போட்டு விட்டு எதை எதையோ உயரமாக கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பெண்மணியின் மரம் காக்கம் இந்த மனசும் கூட தாய்மைதான்!
- Inkpena சஹாயா
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications