2 ஆண்டுகள் கழித்து ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் 'விக்கிலீக்ஸ்' அசாஞ்சே: சரணடைகிறார்?
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள வீக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விரைவில் போலீசாரிடம் சரணடைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல திடுக்கிடும் உண்மைகளை உலகிற்கு தெரிவித்தவர் விக்கலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இங்கிலாந்துக்கு தப்பியோடிய அவரை பாலியல் வழக்கு தொடர்பாக தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு சுவீடன் கேட்டது. ஆனால் அசாஞ்சே இங்கிலாந்தில் உள்ள ஈக்விடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி அவர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

ஒரு புறம் பல்வேறு முக்கிய ராணுவ விவகாரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அசாஞ்சே பற்றி விசாரணை நடத்தி வருகிறது அமெரிக்கா. இந்நிலையில் அசாஞ்சே 2012ம் ஆண்டில் இருந்து தூதரகத்தை விட்டு வெளியேறவில்லை. அவர் மீது சூரிய ஒளியே படவில்லை. தூதரகத்திற்கு வெளியே 24 மணிநேரமும் போலீசார் நிற்கிறார்கள். அவர் மட்டும் வெளியே வந்தால் உடனே அவர் கைது செய்யப்படுவார். மேலும் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவார்
இந்நிலையில் அசாஞ்சே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை. இப்படி ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது எனது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. இங்கு தஞ்சம் அடைந்த காலத்தில் இருந்து நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். விரைவில் தூதரகத்தை விட்டு வெளியேற உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டில் இருந்து ஒரே இடத்தில் சூரிய வெளிச்சம் இன்றி அடைந்து கிடக்கும் அசாஞ்சேவுக்கு இதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அவர் போலீசில் சரண் அடைய முடிவு செய்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications