Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் சர்மா ஒலி.. 3வது முறையாக பிரதமர்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

காத்மண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி இன்று பதவியேற்றுள்ளார். பிரதமர் சர்மா ஒலியுடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 25ல் பதவியேற்றார்.

nepal sharma oli world

நேபாள அரசு: அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா. இந்தக் கூட்டணி அரசு மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் பிரசந்தா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அதன் பிறகு மேலும் 3 முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வென்று பதவியில் நீடித்தார்.

இந்நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தில் 5வது முறையாக நம்பிக்கை ஓட்டெடுப்பு கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 275 உறுப்பினர்களில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 63 ஓட்டுகளும், எதிராக 194 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரசந்தா தலைமையிலான அரசு தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியிலிருந்து புஷ்ப கமல் பிரசந்தா விலகினார்.

சர்மா ஒலி பதவியேற்பு: இதையடுத்து நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலி பிரதமராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். நேபாள நாட்டின் பிரதமராக கே.பி சர்மா ஒலி இன்று பதவியேற்று உள்ளார்.

அவருக்கு நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா இன்று காலை 11 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பிரதமர் சர்மா ஒலியுடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான ஏழு அம்ச ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டு உள்ளனர். நாடாளுமன்றத்தில் எஞ்சியிருக்கும் பதவி காலம் இரு கட்சிகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. அதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு சர்மா ஒலி நேபாள அரசாங்கத்தை வழிநடத்துவார்.

72 வயதான சர்மா ஒலி ஏற்கனவே 2015 அக்டோபர் முதல் 2016 ஆகஸ்ட் வரையிலும் அதன்பிறகு, 2018 பிப்ரவரி முதல் 2021 ஜூலை வரையிலும் நேபாளத்தின் பிரதமராக இருந்தார். சொந்த கட்சியில் ஏற்பட்ட மோதலால் அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 3வது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+