Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை! திடீரென இறங்கி வரும் பாக் ராணுவ தளபதி! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா உடனான காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். மேலும் இந்தியா, சீனா, அமெரிக்காவுடன் நல்லுறவு பேண பாகிஸ்தான் விரும்புகிறது'' என அந்த நாட்டின் ராணுவ தலைமை ஜெனரல் கமர் பஜ்வா கூறினார்.

'இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடல்' என்ற பெயரில் இருநாள் மாநாடு நடைபெற்றது. விரிவான பாதுகாப்புக்கான சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை மறுவடிவம் செய்தல் என்ற தலைப்பின் கீழ் சர்வதேச பாதுகாப்பில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை ஜெனரல் கமர் பஜ்வா பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:

இந்தியாவுடன் பேச்சு

இந்தியாவுடன் பேச்சு

நம்நாட்டில் பிரச்சினைகளை விலக்கி வைப்பது முக்கியமானதாகும். பிற நாடுகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உள்ளது. காஷ்மீர் பிரச்சனை உட்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளது. இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டால் அதற்கான முன்னெடுப்புகளுக்கு தயாராக இருக்கிறோம்.

ஏவுகணை விஷயத்தில் கவலை

ஏவுகணை விஷயத்தில் கவலை

காஷ்மீர் பிரச்சினையை தவிர, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை கவலையளிக்கிறது. இதுவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்த பிராந்தியத்தின் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்களுக்கு அமைதியை கொண்டு வர வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்.
பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம் விபத்து என இந்தியா கூறியது. இது கவலையளிக்கும் வகையில் உள்ளது. மேலும் நாட்டில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் தான் உள்ளது என இந்தியா, பாகிஸ்தான் உள்பட பிற நாடுகளுக்கு ஆதாரங்களுடன் உறுதி அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் ஆயுத படைகளை தாண்டி ஒரு நாட்டில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணை வேறு நாட்டில் பாய்வது இதுதான் முதல் முறை என நான் நினைக்கிறேன். இதனால் அதிக கவனம் தேவை .

ஒற்றுமை, நல்லிணக்கம்

ஒற்றுமை, நல்லிணக்கம்

தெற்காசியா மேற்குலக நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் கொள்கையானது தேசிய பாதுகாப்பில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதை முன்னெடுக்க அண்டை நாடுகளுக்கும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும். தற்போது ஓராண்டாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இது திருப்தி அளிக்கிறது.

அமெரிக்காவுடன் சுமூக உறவு

அமெரிக்காவுடன் சுமூக உறவு

மேலும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு உள்ளது. இந்த நாடுகள் உள்பட இந்தியாவுடன் சுமூக உறவு வைத்து கொள்வதை தான் பாகிஸ்தான் விரும்புகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கைவிட பாகிஸ்தான் கூறியது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

Recommended Video

    திடீரென Israel பிரதமருக்கு போன் போட்ட PM Modi.. இதான் காரணம்?
    நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டு

    நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டு

    முன்னதாக பாகிஸ்தானில் கடந்த சில வாரமாக பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு உள்ளது. இதற்கு அங்குள்ள ராணுவம் தான் காரணம் என கூறப்படுகிறது. இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் 2 நாட்களுக்கு முன் பேசி இம்ரான் கான் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அமெரிக்கா சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் தான் அமெரிக்காவுடன் சுமூக உறவை வைத்து கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+