கென்ய பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு பீதி... 5 வது மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி- 141 பேர் காயம்
நைரோபி: கென்யா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு பீதியில் உயிர் தப்பிக்க நினைத்த மாணவர்கள் மாடியில் இருந்து குதித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த 141 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 2-ந்தேதி கென்யாவின் கரிஸ்ஸா பல்கலைக்கழத்தில் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்கள். இதில், 148 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு மாணவர்கள் வெளியேறவில்லை.

இந்நிலையில், நேற்று காலை நைரோபி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீகல் டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென வெடித்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். டிரான்ஸ்பார்மர் வெடித்த சத்தத்தை குண்டு வெடித்ததாக மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டனர். எனவே தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாணவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பல மாணவர்கள் மாடியில் இருந்து குதித்து வெளியேற முயற்சித்தனர்.
இதனால், மாணவர்களுக்கிடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உயிர் ஆசையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல ஓடியதால் பல மாணவர்கள் தவறிக் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்ற மாணவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினர். இதில் 141 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல், 5வது மாடியில் இருந்து குதித்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நைரோபி பல்கலைக்கழக துணைவேந்தர் பீட்டர் பிதி கூறுகையில், ‘‘எலக்ட்ரீக்கல் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பொறி கிளம்பியது. இது தவறுதலாக வெடிகுண்டு வெடித்ததாக பீதி கிளம்பியது. இதனால் மாணவர்கள் பதறி அடித்து ஓடியுள்ளனர்.
3-ம் ஆண்டு மாணவர் ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனயைில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேலும், சிலர் 6-வது மாடியில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications