"இது" மட்டும் குழந்தைகளுக்கு சாப்பிட தர வேண்டாம்.. குடற்காய்ச்சல் நோய் அபாயம்.. ஆய்வில் புது தகவல்
கிண்டர் ஜாய் சாக்லேட்டுகளுக்கு தடைவிதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது
பிரஸ்ஸல்ஸ்: குழந்தைகள் ஆசை ஆசையாக சாப்பிடும் சாக்லேட்டுகளுக்குகூட ஆபத்து வந்துவிட்டது.. இதை ஒரு ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது..!
உலகம் முழுவதும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது சாக்லேட்டுகள்தான்.. இன்றுவரை இதன் மீதான கிரேஸ் மட்டும் குழந்தைகளுக்கு குறைவதே இல்லை. சில சமயம், பெரியவர்களையும் இந்த சாக்லேட்டுகள் சுண்டி இழுத்துவிடும்.
அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்களில் ஒன்றுதான் கிண்டர் சர்ப்ரைஸ்.. இதற்குதான் இப்போது ஆபத்து வந்துள்ளது.. இந்த சாக்லேட் சாப்பிட்டால் குடற்காய்ச்சல் நோய் ஏற்படும் என்று ஒரு ஆய்வில் பகீர் தகவல் வந்துள்ளது..

சாக்லேட்டுகள்
சமீப காலமாக, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இந்த கிண்டர் சர்ப்ரைஸ் சாக்லேட்கள் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன.. அப்போதுதான், இந்த சாக்லேட் குழந்தைகளின் உயிரையே பறிக்கும் ஆபத்தை கொண்டிருப்பது உறுதி ஆகி உள்ளது.. இதையடுத்து கிண்டர் சாக்லேட்டை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி தடை விதித்து விட்டது..

கிண்டர் சர்ப்ரைஸ்
அதுமட்டுமல்லாமல், பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது... இந்த உத்தரவையடுத்து, பெரேரோ குழுமம் கிண்டர் சப்ரைஸ் சாக்லேட்டை மார்க்கெட்டுகளில் விற்பனையில் இருந்து அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.. அதேசமயம், விற்பனை செய்யப்படும் கிண்டர் சப்ரைஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல், பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது... இந்த உத்தரவையடுத்து, பெரேரோ குழுமம் கிண்டர் ஜாய் சப்ரைஸ் சாக்லேட்டை மார்க்கெட்டுகளில் விற்பனையில் இருந்து அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.. அதேசமயம், விற்பனை செய்யப்படும் கிண்டர் ஜாய் சப்ரைஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல், பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது... இந்த உத்தரவையடுத்து, பெரேரோ குழுமம் கிண்டர் ஜாய் சாக்லேட்டை மார்க்கெட்டுகளில் விற்பனையில் இருந்து அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.. அதேசமயம், விற்பனை செய்யப்படும் கிண்டர் ஜாய் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிண்டர் சர்ப்ரைஸ்
இது இந்தியாவுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.. இங்கும் கிண்டர் சாக்லேட்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு உள்ளன.. ஜரூராக விற்பனை ஆகி கொண்டுமிருக்கிறது.. எனவே, இந்தியாவிலும் இந்த சாக்லேட் திரும்ப பெறப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது... ஆனால் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை என்பது நிறுவன அறிவிப்பாகும். இந்தியாவை பொறுத்தவரை, கிண்டர் சாக்லேட்டுகள் புனேவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. ..கிண்டர் ஜாய் சாக்லேட்டுக்கும் கிண்டர் சர்ப்ரைஸ் சாக்லேட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

கிண்டர் ஜாய்
இந்தியாவில் புனேவில் தயாராகும் சாக்லேட் கிண்டர் ஜாய் எனப்படும், பெல்ஜியத்தில் தயாராகும் சாக்லேட் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் எனப்படும்.. அதனால் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் போலவே கிண்டர் ஜாய் சாக்லேட் திரும்பப்பெற வாய்ப்பில்லை என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் கிண்டர் சாக்லேட்டுக்கு குழந்தைகளிடையே அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த சாக்லேட்டினால் குழந்தைகளுக்கு பேராபத்து இருக்கிறது என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications