காதை பிளக்கும் குண்டு சப்தம்.. நொறுங்கும் ஜன்னல் கண்ணாடிகள்! மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம்
கிவ்: ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பதுங்கியுள்ளார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போரிட தொடங்கியுள்ளது. உக்ரைனில் நுழைந்த ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். உக்ரைன் விமான தளங்கள், ராணுவ தளங்கள் ஆகியவற்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள விமான தளங்கள், வான் வழி தளவாடங்களை ரஷ்யா அழித்துவிட்டது. எங்கு திரும்பினாலும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் குண்டு வீச்சு காதை பிளக்கிறது.

உக்ரைன் மீது போர்
பதிலுக்கு உக்ரைனும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்கள் மற்றும் ஒரு ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தாக்குதல்
இந்த நிலையில் ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பதுங்கியுள்ளனர். முக்கிய உடைமைகளை கொண்டு சென்று அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் மறைந்துள்ளார்கள். சிலர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம்
உக்ரைனின் கிழக்கு பகுதியில் குண்டு வீசு நடப்பதால் அதன் அதிர்வால் அங்கே இருக்கும் குடியிருப்புகள், அரசு கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளன. வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளையும் தங்களோடு மக்கள் அழைத்து வந்துள்ளனர்.
Recommended Video

குடியிருப்பு பகுதிக்குள் தாக்குதல்
குடியிருப்பு பகுதிக்குள் தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா விளக்கமளித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் தாக்குதலால் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதா உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications