இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே நல்லதல்ல: லக்வி விடுதலை பற்றி பிரான்ஸ்
பாரீஸ்: லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது, உலகத்திற்கு நல்லதல்ல என்று இந்திய பிரதமர் மோடியிடம், பிரான்ஸ் எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதல் சதிகாரன் லக்வியை விடுதலை செய்யுமாறு லாகூர் ஹைகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது, உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அங்கும் லக்வி விடுதலைக்கு ஆட்சேபம் கிளம்பி உள்ளது.
இது தொடர்பாக பாரீஸ் நகரில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு எம்.பி., லக்வியின் விடுதலை துரதிர்ஷ்டவசமானது, இது இந்தியாவுக்கும் சரி, உலகத்துக்கும் சரி நல்லதல்ல என கருத்து கூறினார் என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினையில் இந்தியாவுடன் இணைந்து நிற்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications