Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிர் பலிகளை தடுக்க உடனே போரை நிறுத்துங்கள்.. ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையேயான போர் இப்போது லெபனான் வரை நீண்டிருக்கிறது. லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு போரை தீவிரப்படுத்துவதாகவும், உடனே போரை நிறுத்த வேண்டும் எனவும் லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதி பிரித்து இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டத்திலிருந்து, மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தொடக்கம் முதல் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்ரேல், தற்போதுவரை பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு எதிராக அரசியல் பேசிய இயக்கங்களை அந்நாடு தாக்கியிருக்கிறது. இந்த புள்ளியில்தான், ஆயுதம் ஏந்திய இயக்கள் உருவாகின. இதில் ஹமாஸ் எனும் அமைப்பு முக்கியமானது. இதனை தீவிரவாத அமைப்பு என அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறிப்பிடுகின்றன.

israel lebanon iran

இந்த அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஹமாஸ் மீதும் பாலஸ்தீனம் மீதும் போரை அறிவித்தது. இந்த போரில் இதுவரை 45,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். காசா எனும் பகுதி திறந்தவெளி சுடுகாடாக மாற்றப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் பழிவாங்கும் விதமாக லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா எனும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய குழு, இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் போன்று இது சிறிய குழு கிடையாது, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் இது மிகப்பெரிய குழு எனவே, இஸ்ரேல் தற்போது இந்த குழுவை குறி வைத்து போரை நீடித்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 3,300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று லெபனான் வலியுறத்த தொடங்கியுள்ளது. நேற்று ஈரான் தலைவர் அலி கமேனியின் ஆலோசகரான அலி லாரிஜானி பெய்ரூட் வந்திருந்தார். அவரை வரவேற்றிருந்த லெபனான் பொறுப்பு பிரதமர் நஜிப் மிகாட்டி, போர் நிறுத்தம் குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது ஐநா தீர்மானம் 1701ஐ மேற்கோள் காட்டி, போர் நிறுத்தம் குறித்த பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தின்படி, தெற்கு லெபனானில் லெபனான் இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. அதாவது ஹிஸ்புல்லா இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை.

எனவே, தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான் அரசு கூறியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+