லிபியா சர்வாதிகார அதிபர் முயம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
திரிபோலி: லிபியாவின் நீண்டகால அதிபராக செயல்பட்டு வந்த சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி இன்று கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்குள் நுழைந்த கும்பல் சைஃப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது.
லிபியாவில் நீண்டகாலமாக இருந்தவர் முயம்மர் கடாபி. இவர் சர்வாதிகாரியாக அறியப்பட்டார். இவரது ஆட்சி கடந்த 2011ல் கவிழ்க்கப்பட்டது. முயம்மர் கடாபி கொல்லப்பட்டார். உள்நாட்டு புரட்சியால் லிபியாவில் கடும் மோதல் ஏற்பட்டது. தற்போது லிபியா இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. கிளர்ச்சி படைகள் உள்ளன.

2011ம் ஆண்டுக்கு பிறகு இன்னும் லிபியாவில் தேர்தல் நடத்தப்படவில்லை. முயம்மர் கடாபியின் மகன் பெயர் சைஃப் அல் இஸ்லாம். வயது 53. இவர் தனது தந்தை அதிபராக இருந்தபோது நாட்டு மக்களை மிரட்டினார். அரசுக்கு எதிராக போராடியவர்களை மிரட்டினார். போராட்டம் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கை செய்தார்.
லிபியாவில் நடந்த உள்நாட்டு கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சைஃப் அல்-இஸ்லாமிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். அவர் 2011 நவம்பரில் தெற்கு லிபியாவில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு 2015ல் அவருக்கு மரண தண்டனை விதிககப்பட்ட நிலையில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சைஃப் அல் இஸ்லாம் ரகசிய இடத்தில் வசித்து வந்தார். அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் வீட்டில் இரந்த சைஃப் அல் இஸ்லாம் கடாபி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதனை சைஃப் அல் இஸ்லாம் கடாபியின் வழக்கறிஞர் மார்செல் செக்காடி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கும்பல் சைஃப் அல் இஸ்லாம் கடாபியை சுட்டு கொன்றது.
இதுபற்றி சைஃப் அல்-இஸ்லாமின் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் அப்துல்ரஹீம் கூறுகையில், ‛‛அடையாளம் தெரியாத நான்கு பேர் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தனர். அந்த கும்பல் கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்து சைஃப் அல் இஸ்லாமை சுட்டுகொன்றுள்ளனர்'' என்று கூறியுள்ளார். ஆனால் இந்த கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications