நாடு கடத்தக் கோரிய வழக்கு... விஜய் மல்லையாவுக்கு இரண்டாவது முறையாக ஜாமின்!
லண்டன்: நாடு கடத்தக் கோரிய வழக்கில் இரண்டாவது முறையாக விஜய் மல்லையாவுக்கு ஜாமின் வழங்கியது இங்கிலாந்து நீதிமன்றம்.
இந்தியாவின் அரசுத் துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவரை, இங்கிலாந்திலிருந்து நாடு கடத்த வேண்டும் என இந்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நடுவர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தன் தரப்பில் நியாயம் உள்ளதாகவும், அதற்கான சான்றுகளும் இருப்பதாக விஜய் மல்லையா தரப்பு வாதாடியது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications