For Daily Alerts
Just In
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை- சுவிஸ் கோர்ட்
விடுதலைப் புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்கிறது சுவிஸ் நீதிமன்றம்
Recommended Video
சு.சுவாமி சொல்வது யாரை? | LTTE பயங்கரவாத அமைப்பு இல்லை- வீடியோ
சுவிஸ்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுவிஸின் பெலின்சோனா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இவ்வழக்கில் சுவிஸ் அரசு சார்பில், விடுதலைப் புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் விடுதலைப் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. அது பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும் நீதிமன்றம் கூறியது.
மேலும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்தும் சுவிஸ் நீதிமன்றம் விடுவித்தது.
Comments
English summary
The Swiss Court said there was not enough concrete proof to consider the LTTE as a criminal organisation.
Story first published: Friday, June 15, 2018, 12:35 [IST]