இங்கிலாந்து மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைத்தவர் இவர்தானாம்
இங்கிலாந்து மான்செஸ்டரில் நடைபெற்ற பாப் இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைத்தவரின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர்: இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வெடிகுண்டு ஒன்று வெடித்தது.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். 59க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவரின் பெயரை தற்போது வெளியாகியுள்ளது. லிபியாவை பூர்வீகமாகக் கொண்ட சல்மான் ரமதான் அபேதி என்பவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
லிபியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் 22 வயது மட்டுமே நிரம்பியர் என்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்பு கொண்டவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரமதான் அபேதி பற்றி தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தாக்குதலுக்கு பின்னால் உள்ள சதியை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications