இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரும் மகாத்மா காந்தியின் 'ராட்டை'
லண்டன்: மகாத்மா காந்தி புனே ஏர்வாடா சிறையில் இருந்தபோது பயன்படுத்திய ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலத்தில் விடப்படுகிறது.
இந்திய சுதந்திர போராட்டித்தில் கலந்து கொண்டபோது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ராட்டை ஒன்றை பயன்படுத்தினார். பின்னர் அந்த ராட்டையை அமெரிக்க பாதிரியாரான ரெவரன்ட் ஃப்லாய்ட் ஏ பஃப்பருக்கு பரிசாக அளித்தார்.

அந்த ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனமான முல்லக்ஸில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ராட்டையின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 59 லட்சத்து 68 ஆயிரத்து 827 ஆகும்.
முல்லக்ஸில் காந்தி தொடர்பான சுமார் 60 பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட உள்ளன. அவற்றுள் முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை அடக்கம்.












Click it and Unblock the Notifications