ஓரினச் சேர்க்கை வழக்கு: அப்பீல் மனு தள்ளுபடி - மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வருக்கு மீண்டும் சிறை
கோலாலம்பூர்: மலேசியாவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல்வாதியும், முன்னாள் துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் மேல்முறையீடு மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு பதவியில் இருந்த போது தனக்கு உதவியாளராக இருந்த ஒரு ஆணுடன் அன்வர் இப்ராஹிம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அன்வர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து அன்வர் அப்பீல் செய்திருந்தார்.

தனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக ஆளும் கட்சி செய்த அரசியல் சதி என்று அன்வர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அப்போதைய பிரதமர் மகாதீர் முகம்மது மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். தனது அப்பீல் மனுவிலும் இதையே அவர் காரணமாக கூறியிருந்தார்.
அப்பீல் மனுவை விசாரித்த மலேசிய உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அவரது அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. மேலும், அன்வர் இப்ராஹிமுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அது உறுதி செய்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அடுத்த தேர்தலில் (2018ம் ஆண்டு) அவர் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்வர் இப்ராகிம், தனது இல்லத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாப்பிட்டார். அதன் பின்னர் அவரை போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். கோலாலம்பூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்காய் புலாக் சிறையில் அவரை அடைத்தனர்.
மலேசியப் பிரதமராக மகாதீர் முகம்மது இருந்தபோது துணைப் பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிரம். அப்போது அவர் பிரபலமடைந்தும் வந்தார். இந்த நிலையில்தான் ஓரினச் சேர்க்கை புகாரில் சிக்கி செல்வாக்கிழந்தார். மேலும் அவர் மீது ஊழல் புகார்களும் எழுந்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications