நாங்களும் பேச மாட்டோம்... கத்தாருடன் 'கா' விட்ட நாடுகளின் பட்டியலில் இணைந்தது மாலத்தீவுகள்!
வளைகுடா நாடுகளை தொடர்ந்து கத்தாருடனான உறவை முறித்துக்கொள்வதாக மாலத்தீவுகளும் அறிவித்துள்ளது.
மாலே: வளைகுடா நாடுகளை தொடர்ந்து கத்தாருடனான உறவை முறித்துக்கொள்வதாக மாலத்தீவுகளும் அறிவித்துள்ளது. தூதரக உறவை மட்டுமே துண்டித்துக்கொள்வதாக அறிவித்துள்ள மாலத்தீவுகள் வர்த்தக ரீதியிலான உறவுகள் தொடரும் என தெரிவித்துள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவுவது, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது என கத்தார் மீது பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகள் குற்றம்சாட்டின. தீவிரவாதத்துக்கு துணைப்போகும் கத்தாருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்த அந்நாடுகள் தூதர்களை திருப்பப் பெற்றன.
கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் தங்கள் நாட்டில் உள்ள கத்தார் மக்கள் 2 வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். வான்வழி, கடல்வழி மற்றும் சாலை வழி போக்குவரத்தையும் துண்டித்துள்ளன.

வான்பரப்பை மூடிய வளைகுடா நாடுகள்
சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகங்கள் உள்ளிட்ட நாடுகள் கத்தார் விமானங்களுக்கான தங்களின் வான்பரப்பையும் மூடியுள்ளன.கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கத்தாரின் அல் ஜஸீரா உட்பட அனைத்து தொலைக்காட்சி ஒலிபரப்புக்கும் அந்த நாடுகள் தடை வித்துள்ளன.

பஞ்சாயத்து செய்யும் துருக்கி, குவைத்
எனவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. குறிப்பாக கத்தார் மீது தூதரக தடை விதித்த ஐந்து அரபு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த குவைத்தும், துருக்கியும் முயன்று வருகின்றன.

மாலத்தீவும் இணைந்தது
இந்நிலையில், கத்தாருடனான உறவை துண்டித்துக்கொள்வதாக மாலத்தீவுகள் அறிவித்துள்ளது. மாலத்தீவு, கத்தாருக்கு எதிரான முடிவை எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது.

வர்த்தக உறவுகள் தொடரும்
கத்தாருடனான தூதரக உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கத்தார் மற்றும் அந்த பிராந்தியத்தில் முக்கிய நாடாக விளங்கும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை சரி சமமாக வைத்துக் கொள்ள மாலத்தீவு விரும்புகிறது.

வான்பரப்பை மூடவில்லை
சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகங்களை போல அல்லாமல் கத்தார் விமானங்களுக்கான தனது வான்பரப்பை மாலத்தீவு மூடவில்லை. மேலும் கத்தார் மக்களை அங்கிருந்து வெளியேறவும் உத்தரவிட இல்லை.

கத்தாரின் முதலீடே காரணம்
மாலத்தீவில் கத்தார் அதிகளவிலான முதலீடுகளை செய்துள்ளதே இதற்கு காரணமாகும். நாள்தோறும் ஒவ்வொரு நாடும் கத்தாருடனான தங்களின் உறவு கதவை மூடுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications