அமெரிக்க அதிபர் மாளிகை அருகே ஆளில்லா விமானம் பறக்கவிட்டவர் கைது!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபரின் வெள்ளை மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது ஆளில்லா விமானங்களை பறக்க விட மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (எப்.ஏ.ஏ.) அதிரடி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்களை பறக்க விடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறி, ஆளில்லா விமானங்களை யாராவது பறக்க விட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிறுவனம் பிறப்பித்துள்ள உத்தரவில், வாஷிங்டனுக்கு சந்தோஷமாக வரலாம். உங்கள் குடும்பத்தினரை அழைத்து வரலாம். கேமராக்களை கொண்டு வரலாம். ஆனால் ஆளில்லா விமானங்களை மட்டும் வீட்டிலேயே விட்டு விட்டு வாருங்கள் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications