ஆண் குழந்தை இல்லை... மனைவியை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கணவர்
பெய்ஜிங்: மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவர் ஒருவர், அவரை அரை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்தவர் ஷாங் (39). இவரது மனைவி வாங் நி (33). இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஷாங் பக்கத்து நகரத்தில் உள்ள சொத்து வளர்ச்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஷாங்கிற்கு தனக்கு மகன் இல்லையே என்ற கவலை இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், குடிப்பழக்கத்திற்கு ஆளான ஷாங், வீட்டிற்கு வருவதையும் குறைத்தார்.
இதனால் வாங் நிக்கும் மற்றொரு ஆணுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்களது வீட்டை சுற்றி வதந்தி பரவியது. இதைக் கேட்டு கோபமடைந்த ஷாங், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். வாங்கை அடித்து உதைத்த ஷாங், அவரை அரை நிர்வாணமாக்கினார்.
அதனைத் தொடர்ந்து வாங்கின் கையில் ஒரு அட்டையில், "நான் எனது உடலை விற்க விரும்புகிறேன்" (ஈ நன்ட் டொ செல்ல் ம்ய் பொட்ய்) என எழுதி, அவரை வீதி முழுவதும் வலம் வர வைத்தார். மனைவியைக் கண்காணிக்கும் விதமாக காரில் பின் தொடர்ந்தும் வந்துள்ளார் ஷாங்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று வாங்கை மீட்டனர். இது தொடர்பாக விசாரணைக்கு வாங் அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையில் வாங் நடத்தை மீது கூறப்பட்ட புகார்கள் ஆதாரம் அற்றவை என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஷாங் மனைவி வாங்கிடம் மன்னிப்பு கோரினார்.
ஆனால் அவரது மன்னிப்பை வாங் ஏற்று கொண்டாரா என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications