ஷார்ஜாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது.. மனைவி, இரண்டு குழந்தைகளும் தவிப்பு

ஷார்ஜாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உறவினருக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவரை ஷார்ஜா போலீஸார் கைது செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

அபுதாபி : தமிழகத்தைச் சேர்ந்தவர் உறவினருக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவரை ஷார்ஜா போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடியை சேர்ந்த ஒருவர் துபையில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது உறவினருக்காக வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர் பேசியபடி வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஊருக்கு சென்று விட்டார்.

Man belongs to TN was arrested by Sharjah Police

இதைத் தொடர்ந்து அவர் ஷார்ஜா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதால் அவர் தங்கியிருந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.

இதனால் அவரது மனைவியும், இரண்டு பிள்ளைகளும் வேறு ஒருவரது வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் அவரது குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த குடும்பத்தினர் தற்போது விசா காலம் முடிந்தும் தங்கியுள்ளனர். அதனால் துபை இமிக்ரேசன் மூலம் கடிதம் பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த குடும்பத்தினருக்கு தேவையான உணவு, பயண சீட்டு மற்றும் பொருளாதார உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு உதவும் நல்லுள்ளம் படைத்தோர் 055 1045305 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+