காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து 'பலான' கம்ப்ளைன்ட் சொன்ன முதியவர் கைது
வாஷிங்டன்: காதலி தன்னோடு பாலியல் உறவுக்கு சம்மதிக்கவில்லை என்று கூறி காவல்துறையின் அவசர எண்ணுக்கு போன் செய்து புகார் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஸ்பார்ட்டன்பர்க் குடியிருப்பை சேர்ந்தவர் பட்ரிக் டோக்கட் (53). இவர் சம்பவத்தன்று, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணான 911க்கு போன் செய்து, தனது காதலி பே ஊட்ரப் தன்னுடன் உடல் உறவு வைக்க மறுப்பதாகவும், இதை தட்டிக்கேட்குமாறும் கூறியுள்ளார்.
பேத்தியை உடன் வைத்து படுத்துள்ள அந்த பெண்மணி, தனது கோரிக்கையை ஏற்க மறுப்பதாக கூடுதலாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார், பட்ரிக். விரைந்து வந்த போலீசார், அலேக்காக பட்ரிக்கை அரஸ்ட் செய்து தூக்கிச் சென்றனர்.
அவர் முழு போதையில் இருந்துள்ளார். காலை முதல் இரவு வரை குடித்துக்கொண்டே போதையில் இருந்த அந்த நபர், போதை வெறியில் காதலியுடன் உறவு வைக்க சென்றுள்ளார். அவர் மறுத்த நிலையில், போலீசாரிடம் தகவல் சொல்லியுள்ளார். இதுபோன்ற அநாகரீகமான புகாருக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.