ஓவர் ஆர்கஸம்... கிளைமேக்ஸ்ல பார்வையைப் பறி கொடுத்து மீண்ட இளைஞர்!
காலை நேரத்தில் தனது துணையுடன் உறவில் ஈடுபட்டு உச்சக்கட்டத்தில் திளைத்த ஒருவரின் கண்பார்வை பறிபோய் திரும்பி வந்துள்ளது.
Recommended Video

லண்டன்: 29 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட போது அதீத உச்சத்தை எட்டினர். அந்த மகிழ்ச்சியை அவரால் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை காரணம் அவரது பார்வை பறிபோய் பின்னர் மீண்டது.
செக்ஸ் வீரியத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தும் வயாகரா மாத்திரையால் கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
வயாகரா மாத்திரையில் சில்டெனாபில் என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள மூலப்பொருட்கள் கண்விழித்திரையில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.

கண்விழித்திரை பாதிப்பு
இதனால் கண்பார்வை பாதிப்புக்கும் பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி செல்களை கொன்று பார்வையை படிப்படியாக குறைத்து பின்னர் முழுவதும் பறிபோக செய்யும்.

நிரூபித்த நிபுணர்கள்
இந்த சோதனை நல்ல உடல் நலத்துடன் இருந்த சுண்டெலிகளில் நடத்தப்பட்டது. வயாகரா மாத்திரை கொடுத்த 2 நாளிலேயே அவற்றின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

உச்சக்கத்தில் பறிபோன பார்வை
நிபுணர்கள் ஆய்வு ஒருபக்கம் இருக்க இங்கிலாந்தைச் சேர்ந்த 29 வயது வாலிபரின் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை நேரத்தில் உறவில் ஈடுபட்டிருந்த போது உச்சத்தின் போது பார்வை மங்கிப் போனது.

சோகமான முடிவு
பவர்புல் கிளைமேக்ஸ் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதே என்று பதறிய அவர் உடனடியாக மருத்துவமனையை நாடினார். டாக்டர்கள் பரிசோதித்து அந்த நபரின் பார்வை குறைபாட்டை சரி செய்தனர்.

இருபார்வையில் காதலி
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் தனது காதலியை இரு கண்களால் பார்த்து ரசித்தார் அந்த காதல் மன்னன். உற்சாகத்தில் ஒவராக உறவில் திளைத்த அந்த நபரின் இடது கண் பார்வை பறிபோய் மீண்டதில் காதலிக்கு நிம்மதி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications