கருணையே காட்டாத கடவுள்.. "கேஸ்" போட்ட இஸ்ரேலியர்!
Subscribe to Oneindia Tamil
இஸ்ரேல்: தன்னிடம் சரியான கருணை காட்டவில்லை என்று கூறி இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா நகரத்தைச் சேர்ந்த டேவிட் ஷோஷன் என்பவர், அந்நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடவுளுக்குத் தடை ஆணை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த சில வருடங்களாகக் கடவுள் தன்னிடம் கருணையற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இதனால் கடவுளுக்கு எதிராகத் தடை ஆணை பிறப்பிக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எத்தனையோ வினோதமான வழக்குகளை சந்தித்துள்ள நீதிமன்றம், அது நகைப்பிற்குரியது என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications