"செங்கல் கூட மிஞ்சவில்லை.." நொடிகளில் தரைமட்டமான மொராக்கோ.. பேரழிவுக்கு உண்மையில் என்ன காரணம்
ரபாத்: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருக்கும் நிலையில், அங்குக் கிராமங்கள் இப்போது எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம்.
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடான மொராக்கோவை நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவானது. அங்கே கடந்த 120 ஆண்டுகளில் பதிவான மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது இருக்கிறது.

இரவு அனைவரும் தூங்கிய நேரத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் பலரும் கட்டிடத்திற்குள் சிக்கினர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100ஐ தாண்டியுள்ள நிலையில், காயமடைந்தோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் முடியாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பூகம்பம்: இந்த நிலநடுக்கம் மொராக்கோவை மிக மோசமாகப் பாதித்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமம் இந்த நிலநடுக்கத்தால் மொத்தமாகத் தரைமட்டமாகியுள்ளது. அந்த கிராமத்தில் சின்ன கிராமத்தில் ஏற்கனவே 68 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட அட்லஸ் மலைகளில் இருந்து சில கிமீ தூரத்தில் அமைந்துள்ள திக்த் கிராமத்தில் தான் இந்தளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பாதிப்புகள் ரொம்பவே மோசம்.
அங்கே மீட்புப் பணிகளில் ஈடுபட்டோர் எங்காவது மூலையில் ஒரு குரலாவது கேட்குமா.. யாரையாவது உயிருடன் மீட்க முடியுமா என்று தீவிரமாகத் தேடி வருகிறார்கள். ஒட்டுமொத்த திக்த் கிராமும் இப்போது சின்னாபின்னமாகிப் போய் இருக்கிறது. இந்த கிராமத்தில் செங்கல் கூட மிஞ்சவில்லை. அத்தனை கட்டிடமும் தரைமட்டமாகி இருக்கிறது.

பேரழிவு: அந்த கிராமத்தில் வசிக்கும் 25 வயதான உமர் ஐட் எம்பரேக் என்பவருக்கு சில வாரங்களில் திருமணம் நடந்திருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் வெளியே இருந்த இவர், நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் லைனில் இருக்கும் போதே நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழ அந்த பெண்ணின் அலறல் சத்தத்தை இவர் கேட்டுள்ளார்.
அட்லஸ் மலைக்கு அருகிலேயே இருப்பதால்.. இந்த கிராமம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இது குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "இங்கே அவ்வளவுதான்.. மொத்தமாகக் கிராமமே தரைமட்டமாகிவிட்டது. இங்கே இனிமேல் எதுவும் செய்ய முடியாது.. ஒட்டுமொத்த கிராமமும் செத்துவிட்டது" என்கிறார்கள்.
என்ன காரணம்: இந்த கிராமத்தில் இருக்கும் வீடுகள் பாரம்பரிய கற்கள், மணல், மரங்களைக் கொண்டு கட்டப்பட்டதாக இருந்தது. இங்கே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாக இதுவே காரணமாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இதற்கு முன்பு இதுபோல நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லையாம். இதனால் பொதுமக்கள் இங்கே வீடுகளைக் கட்டும்போது, நிலநடுக்கம் குறித்தெல்லாம் சிந்தித்தே இல்லை. இந்தச் சூழலில் தான் ஒற்றை நிலநடுக்கம் இந்த ஒட்டுமொத்த கிராமத்தையும் காலி செய்துள்ளது.
இங்கு மட்டுமில்லை. மொராக்கோ நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் நிலை. அங்கே இந்தளவுக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்படும் என்று யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதன் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் எதுவும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. பாதிப்புகள் மோசமாகி, அப்படியே கட்டிடங்கள் சரிந்து விழ இதுவே காரணமாகும்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications