மர்லின் மன்றோவுக்கு மாஜி கணவர் எழுதிய காதல் கடிதம்.. ரூ. 48 லட்சத்துக்கு ஏலம்!
லண்டன்: மறைந்த பேரழகி மர்லின் மன்றோவுக்கு அவரது முன்னாள் கணவர் எழுதிய காதல் கடிதம் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 48 லட்சத்து 28 ஆயிரத்து 625 ரூபாய்க்கு அந்தக் கடிதம் ஏலம் போயுள்ளது.
மர்லினின் முன்னாள் கணவர் பெயர் ஜோ டிமாகியோ. இவர் எழுதிய அந்தக் காதல் கடிதம்தான் அமெரிக்க மதிப்பில் 78 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது.

ஜூலின்ஸ் ஆக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. அதேபோல இன்னொரு முன்னாள் கணவரான ஆர்தர் மில்லர் எழுதிய காதல் கடிதம் 44,000 டாலருக்கு விலை போனது.
இந்தக் காதல் கடிதங்களை மர்லினின் நடிப்புப் பயிற்சியாளரும், அவரது குருவுமான லீ ஸ்டிராஸ்பெர்க் இத்தனை காலமாக வைத்திருந்தார். தான் வைத்திருந்த அனைத்தையும் தனது நண்பர் ஒருவரிடம் அவர் மறைவதற்கு முன்பு கொடுத்திருந்தார். அந்த நண்பர்தான் தற்போது அவற்றில் சிலவற்றை ஏலத்தில் விட்டுள்ளார்.
இதுபோக கருப்பு நிற வெல்வெட் ஓபரா கோட் 93,760 டாலருக்கு விலை போனது. அதேபோல அவரது நெக்லஸ் ஒன்று 34,375 டாலருக்கு விலை போனது.












Click it and Unblock the Notifications