ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின் கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி.. லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு
ஒட்டாவா: கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவி ஏற்கவுள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின் அந்நாட்டின் புதிய பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் மார்க் கார்னி பதவி ஏற்கவுள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார். இவர் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் எட்டாவது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். நிதி நிலைத் தன்மை வாரியத்தின் தலைவராகவும் 2011 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார். லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில், மார்க் கார்னி 1 லட்சத்து 31 ஆயிரத்து 674 வாக்குகளைப் பெற்றார். மொத்த வாக்குகளில் 85.9 சதவீத வாக்குகளையும் மார்க் கார்னி பெற்றிருந்தார்.

தலைமைப் பதவிக்கு போட்டியிட்டவர்களான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பேலிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து, லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
கனடாவின் பிரமரான ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல, லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமரும், லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர் 24 ஆவது புதிய பிரதமராகப் பதவி ஏற்கிறார். லிபரல் கட்சியின் தலைவராகவும் பதவி ஏற்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications