மேன் புக்கர் விருது 2015... முதன்முறையாக ஜமைக்கா நாட்டு எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் வென்றார்

Subscribe to Oneindia Tamil

கிங்ஸ்டோன்: ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மார்லன் ஜேம்ஸ், ப்ரீப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ் என்ற புத்தகத்திற்காக இந்தாண்டிற்கான மேன் புக்கர் விருதைப் பெற்றுள்ளார்.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ். இவர் 70களில் அந்நாட்டில் நடந்த பெரும் மோதல்களைக் கொண்டு ‘ப்ரீப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ்' என்ற புத்தகத்தை எழுதினார்.

Marlon James wins Man Booker prize 2015

பாப் மார்லி என்பவருடைய படுகொலையை மையமாக வைத்து இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். தற்போது 44 வயதாகும் மார்லின் ஜேம்ஸ், மின்னபோலீஸில் வாழ்ந்து வருகிறார். இந்தப் புத்தகத்திற்காக மேன் புக்கர் விருதைப் பெற்றுள்ளார் மார்லின்.

இந்தப் புத்தகமானது ஆச்சர்யங்கள் மிக்கதாகவும், சுவாரஸ்யமானதாகவும், அதிரடி திருப்பங்களைக் கொண்டதாகவும் இருந்ததாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மேன் புக்கர் விருதைப் பெறும் முதல் ஜமைக்கா நாட்டுக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மார்லின். லண்டனில் நடைபெற்ற விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்றது குறித்து மார்லின் கூறுகையில், ‘இது ஒரு கனவைப் போல் இருக்கிறது. நாளை காலை எழுந்ததும், நேற்று நடந்தது முழுவதும் கனவு எனச் சொல்லி விடுவார்களோ எனத் தோன்றுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+