அதிகாலையில் அலறிய மக்கள்.. மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 48 மணி நேரத்தில் 2வது பூகம்பம்!
மெக்சிகோ சிட்டி: கடந்த சில காலமாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறது. அப்படித் தான் இன்று மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவின் ஓக்ஸாகா கடற்கரையை ஒட்டி இன்று காலை 6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் பூகம்பத்தால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நிலநடுக்கம் என்பது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மேலும், அது எப்போது எங்கு ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடியாததாலேயே பூகம்பங்கள் பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளன. கடந்த சில நாட்களாகவே ரஷ்யா, துருக்கி என உலகின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இதற்கிடையே இன்று காலை மெக்சிகோவின் ஓக்ஸாகா கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.0ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் அங்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அடுத்தடுத்து தாக்கும் நிலநடுக்கம்
இதே பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இப்போது வெறும் 48 மணி நேரத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை அன்று குவாத்தமாலாவின் தென்மேற்குக் கடற்கரையில், சாம்ப்பெரிக்கோவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தென்-தென்மேற்கில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 9 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது. குவாத்தமாலா நகரம் மற்றும் தெற்கு மெக்சிகோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதேநாளில், மெக்சிகோவின் சியாபாஸ் கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இப்படி அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேநேரம் இந்தப் பூகம்பங்களால் எந்தவித உயிரிழப்புகளோ அல்லது முக்கிய உள்கட்டமைப்புகளுக்குச் சேதங்களோ ஏற்படவில்லை என்று மெக்சிகோ மற்றும் குவாத்தமாலா அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தால் தங்கள் கட்டிடங்கள் எப்படிக் குலுங்கின என்ற வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ஏன் ஏற்படுகிறது
நமது பூமிக்கு அடியில் பல டெக்டோனிக் தகடுகள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று மோதும்போதே நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி மெக்சிகோ மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகள் வட அமெரிக்க, கோகோஸ் மற்றும் கரீபியன் டெக்டோனிக் தட்டுகளின் நில அதிர்வு-செயல்பாட்டு விளிம்பில் அமைந்துள்ளன. இதனால் அவை தொடர்ந்து நிலநடுக்க அபாயத்தை எதிர்கொள்கின்றன. குறுகிய காலத்தில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படும் நிலையில், அங்கு ஒரு வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதையே உணர்த்துவதாக இருக்கிறது.
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
ஆகஸ்ட் 11, 2025 - 6.0 ரிக்டர், ஓக்ஸாகா, மெக்சிகோ (ஆழம்: 10 கி.மீ)
ஆகஸ்ட் 9, 2025 - 5.9 ரிக்டர், குவாத்தமாலா (ஆழம்: 9 கி.மீ)
ஆகஸ்ட் 9, 2025 - 5.7 ரிக்டர், சியாபாஸ், மெக்சிகோ (ஆழம்: 10 கி.மீ)
இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படும் நிலையில், கடற்கரை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏனென்றால் பிரதான நிலநடுக்கம் முடிந்தாலும் கூட அதன் பிறகு பல மணி நேரம் சிறு நில அதிர்வுகள் ஏற்படும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications