துரத்தி வந்த எமன்... அன்று மனைவி உயிர் தப்பினார்.. இன்று கணவர் உயிரிழந்தார்!
கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அதன் பணியாளரான இந்திய வம்சாவளி சீக்கியரான சஞ்சித் சிங் சந்துவின் கதை மிகச் சோகமாக உள்ளது.
இவரது மனைவியும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்தான். இவர் சில மாதங்களுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பயணித்திருக்க வேண்டியவர். அப்போது தனது பணியை இன்னொருவருக்கு மாற்றி விட்டதால், அதிர்ஷ்டசமாக தப்பினார்.
அதேபோல சந்துவும் இன்னொருவர் பார்க்க வேண்டிய பணியை தான் வாங்கிப் பார்க்கப் போய் இப்போது உயிரை விட்டுள்ளார்.

தப்பிய மனைவி.. சிக்கிய கணவர்
சந்துவின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு மாயமாகிப் போன மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பணியாற்றியவர்.

கடைசி நேர பணிமாற்றத்தால் உயிர் தப்பியது
அந்த விமானத்தில் கடைசி நேரத்தில் அவர் தனது பணி நேரத்தை மாற்றியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் தற்போது அவரது கணவரான சந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மனைவியைப் போலவே
அதேபோல சந்துவும் கூட எம்எச் 17 விமானத்தில் பயணிக்கும் திட்டத்தில் முதலில் இல்லை. ஆனால் தனது கோலாலம்பூரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை மாற்றி விட்டு இவர் பயணித்துள்ளார். ஆனால் விதி விளையாடி விட்டது. அன்று மனைவி தப்பினார்.. இன்றோ கணவர் மாட்டிக் கொண்டு விட்டார்.

சாப்பாடெல்லாம் வீணாகிப் போனதே
சந்துவின் தந்தை ஜிஜார் சிங் கூறுகையில், தனது மகனின் வருகையை எனது மனைவிதான் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தார். மகனுக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் செய்து வந்தார். ஆனால் அவன்தான் வராமலேயே போய் விட்டான் என்று கூறி கதறி அழுதார் ஜிஜார் சிங்.

ஒரே மகன்
சஞ்சித் சிங் சந்து, ஜிஜார் சிங்கின் ஒரே மகன் ஆவார். இவருக்கு ஒரே ஒரு சகோதரி மட்டுமே. மூத்த சகோதரியான அவர் இத்தாலியில் வசித்து வருகிறார். 41 வயதான சந்துவின் மரணம் ஜிஜார் சிங் குடும்பத்தை சிதறடித்துள்ளது.

இதயமே நொறுங்கிப் போய் விட்டது
ஜிஜார் சிங் மேலும் கூறுகையில், எனக்கு 71 வயதாகிறது. எனது மனைவிக்கு 73 வயது. என்னை விட 2 வயது மூத்தவர். இருவரும் வயோதிகத்தின் பிடியில் இருப்பவர்கள். சந்து எங்களுக்கு ஒரே மகன். இப்போது அவன் போய் விட்டான். எனக்கு 2 முறை பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. இதயமே நொறுங்கி்ப் போனது போல உணர்கிறேன். இனி நாங்கள் என்ன செய்யப் போகிறோம். நினைத்தாலே பதறிப் போகிறது என்றார் ஜிஜார் சிங்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications