பக் ஏவுகணையால் தாக்கப்பட்ட மலேசிய விமான விசாரணை அறிக்கை: புல்லரிக்க வைக்கும் தகவல்கள்
ஆம்ஸ்டர்டாம்: உக்ரைனில் பக் ஏவுகணையால் தாக்கப்பட்ட மலேசிய விமானம் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கையில் வெளியாகியுள்ள சில தகவல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையில் பன்னாட்டு விசாரணை நடந்து வந்தது. அந்த குழு தனது இறுதி அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையின் 169வது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

விமானி
விமானத்தை பக் ஏவுகணை தாக்கிய வேகத்தில் 2 விமானிகள் மற்றும் 2 துணை விமானிகள் பலியாகியுள்ளனர். விமானிகள் இறந்த பிறகு குறைந்தபட்சம் ஒன்றரை நிமிடத்திற்கு விமானம் நடுவானில் பறந்து அதன் பிறகு கீழே விழுந்துள்ளது.

பயணிகள்
விமானிகள் இறந்த பிறகு விமானம் பறக்கையிலேயே சில பயணிகள் மயங்கிவிட்டார்கள். என்ன நடக்கிறது என்பதை பயணிகள் உணர்வதற்குள் விமானம் கீழே விழுந்துள்ளது.

போன்
பயணிகள் விமானம் விழுவதை உணராததால் தான் கடைசி நிமிடத்தில் யாரும் தங்கள் பிரியமானவர்களுக்கு மெசேஜோ, செல்போனில் காலோ செய்யவில்லை. சிலர் மட்டும் இருக்கையில் உள்ள கைப்பிடியை கட்டியாக பிடித்துள்ளனர். ஒரு பயணியின் உடல் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி கிடந்தது.

காற்று
விமானம் உடைந்த பிறகு காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் இருந்திருக்கும். விமானத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் பறந்து பயணிகள் படுகாயம் அடைந்து தரையில் விழுந்திருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications