விமானம் மாயமாகும் முன் பதிவான கடைசி உரையாடல் முதல்முறையாக ஒலிபரப்பு
பெய்ஜிங்: மாயமான மலேசிய விமானம் தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியபோது பதிவு செய்யப்பட்டது முதன்முறையாக சீன பயணிகளின் உறவினர்களுக்கு ஒலிபரப்பப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமாகி இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட மலேசிய விமானம் எம்.ஹெச். 370ல் பயணித்தவர்களில் 154 பேர் சீனர்கள். விமானம் கடலுக்குள் விழுந்ததை நம்ப சீன பயணிகளின் உறவினர்களில் பலர் மறுக்கின்றனர். இந்நிலையில் விமானம் தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோது பதிவு செய்யப்பட்ட உரையாடல் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் சீன பயணிகளின் உறவினர்களுக்கு முதன்முறையாக ஒலிபரப்பப்பட்டது.

மலேசியா 370 ஹோ சி மின்ஹ் 120.9ஐ தொடர்பு கொள்கிறது, குட்நைட் என்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ரேடார் கன்ட்ரோலரின் குரல் கேட்கிறது. பதிலுக்கு குட்நைட் மலேசியன் 370 என்ற ஆண் குரல் கேட்கிறது. அந்த குரல் விமான சிப்பந்திகளில் ஒருவருடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
விமானம் மாயமான 50 நாட்கள் கழித்து இந்த ஒலிப்பதிவை மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மார்ச் 8ம் தேதி இரவு 2.03 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிஸ்பாட்ச் மையம் வியட்நாமில் உள்ள தரைக்கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறு எம்.ஹெச். 370 விமானத்தின் விமானிக்கு தகவல் அனுப்பியது. ஆனால் விமானத்தில் இருந்து பதில் வரவில்லை.
இதையடுத்து 20 நிமிடங்கள் கழித்து இரவு 2.22 மணிக்கு ராயல் மலேசிய விமானப்படையின் ரேடாரில் விமானம் கடைசியாக தெரிந்துள்ளது.
விமானத்தின் எரிபொருள் 7 மணிநேரம் 31 நிமிடங்களில் தீர்ந்து போயிருக்கும் என்று மலேசிய அதிகாரிகள் சீன பயணிகளின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications