குவைத்தில் நடந்த 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!
குவைத்: குவைத்தில் கே-டிக் நடத்திய 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த 14ம் தேதி துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் கடந்த 14ம் தேதி துவங்கியது.

குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிகழ்ச்சி துவங்கியது. வெள்ளிக்கிழமை (15.05.2015) அன்று நண்பகல் அதே பள்ளிவாசலிலும், அன்று மாலை ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை (16.05.2015) அன்று ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி, மேலப்பாளையம், உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வரும், மஜ்லிஸுல் உலமா சபை தலைவருமான மவ்லவீ எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மூன்று நாட்கள் இரண்டு இடங்களில் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 1,800 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு உணவும், தேநீரும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications