9 ஆயிரம் பேரை பலி வாங்கிய நேபாளத்தில் இன்று மீண்டும் நில நடுக்கம்- பீதி அகலாத மக்கள்!
காத்மண்டு: நேபாள நாட்டில் இன்று மீண்டும் 6 முறை நிலஅதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாகவும், அதற்கு அதிகமாகவும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25-ந்தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனது.

கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை சந்தித்துள்ள நேபாளம், அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறது. அந்த நிலநடுக்கத்துக்கு, நேபாளத்தில் மட்டும் 9,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 20,000-க்கும் அதிகமானோர் வரை காயமடைந்துள்ளனர். பலர் கை கால்களை இழந்து தவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம் நிகழ்ந்து, ஒரு மாதம் கடந்த நிலையில், இன்று மீண்டும் 6 முறை நிலஅதிர்வு உணரப்பட்டது.
நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாகவும், அதற்கு அதிகமாகவும் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை 5.29 மணியளவில் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் 4.0 ரிக்டர் அளவுகொண்ட நிலஅதிர்வு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் டோலாகா மாவட்டத்தை மையமாக கொண்டு 4.2 ரிக்டர் அளவுகொண்ட நிலஅதிர்வு ஏற்பட்டது. முன்னதாக 3.07 மணி மற்றும் 3.40 மணியளவிலும் 4.0 ரிக்டர் அளவுகொண்ட நிலஅதிர்வு ஏற்பட்டது
டோலாகாவில் மதியம் 12:14 மணிக்கு 4.1 ரிக்டர் அளவுக் கொண்ட நிலஅதிர்வும், 11:36 மணிக்கு 4.2 ரிக்டர் அளவுக்கொண்ட மற்றொரு நிலஅதிர்வும் உணரப்பட்டது.
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று டோலாகா ஆகும். நேபாளத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 4.0, மற்றும் அதற்கு அதிகமான அளவுகொண்ட நிலஅதிர்வுகள் 280 முறை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications