லெபனான் சிறையில் இருந்த அல் கொய்தா இயக்க தளபதி மரணம்
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: லெபனானின் சிறையில் இருந்த அல் கொய்தா இயக்கத்தின் தளபதி அல் மஜித் பின் முகமது அல் மஜித் மரணமடைந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் அல்கொய்த இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டவர் அல்- மஜித் பின் முகமது அல் மஜித். கடந்த நவம்பர் 19 ந் தேதி பெய்ரூட் ஈரானியன் தூதர் அலுவலகம் அருகே மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.
இத் தாக்குதல் தொடரபாக அல் மஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். சவூதி நாட்டை சேர்ந்த மஜித், சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வந்தார். இன்று அல்மஜித் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இத்தகவலை லெபனான் ராணுவ ஜெனரல் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications