மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஹோண்டுராஸ் நாட்டு அழகி திடீர் மாயம்!
ஹோண்டுராஸ்: 2014 மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள மிஸ் ஹோண்டுராஸ் அழகி மரியா ஜோஸ் அல்வர்டோவும், அவரது சகோதரி சோபியா டிரினிடாடும் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை மிஸ் ஹோண்டுராஸ் வேர்ல்ட் அழகிப் போட்டிக்கான மேலாளர் எடுவர்டோ சப்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை முதலே இருவரையும் காணவில்லையாம். அன்றைய தினம், மேற்கு ஹோண்டுராஸின், சான்டா பார்பரா நகரில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு இருவரும் போயுள்ளனர். அதன் பின்னர் மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து சனிக்கிழமை வரை போலீஸில் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். அதன் பின்னரே போலீஸை நாடியுள்ளனர்.
19 வயதான மரியா, சான்டா ரோசா டி கோபன் என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடந்த அழகிப் போட்டியில் மிஸ் ஹோண்டுராஸ் வேர்ல்ட் 2014 போட்டியில் பட்டம் வென்றவர் ஆவார்.
அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள மிஸ் வேர்ல்ட் 2014 அழகிப் போட்டியிலும் இவர் பங்கேற்கவிருந்தார். ஆனால் அதற்குள் காணாமல் போய் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications