மலேசிய விமானம் மாயமான பிறகும் தொடர்பில் இருப்பதாக பொய் சொன்னது யார்?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் வேண்டும் என்றே வழக்கத்திற்கு மாறான பாதையில் சென்றுள்ளது. அவ்வாறு விமானம் பாதை மாறிச் செல்ல ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் யாரோ உதவி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகமோ, பயணிகளின் உடலோ கிடைக்கவில்லை
விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

மாயம்
விமானம் வேண்டும் என்றே வழக்கத்திற்கு மாறான பாதையில் சென்றதாக விபத்து குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராடார்
விமானத்தை ராடாரில் இருந்து மறையச் செய்ய யாரோ டிரான்ஸ்பான்டரை சுவிட் ஆப் செய்துள்ளனர். அதற்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர் யாரோ உதவியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

வியட்நாம்
மலேசிய விமானத்தை ஒரு முறை ராடாரில் பார்த்தோம். ஆனால் சில நிமிடங்களில் அது ராடாரில் இருந்து மாயமானது என்று வியட்நாம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ்
விமானம் ராடாரில் இருந்து மாயமாகி 45 நிமிடங்கள் கழித்து அதை நினைத்து வியட்நாம் அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். அந்நேரம் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன மையத்தில் இருந்து, விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது. அது கம்போடியாவில் பறக்கிறது என்று வியட்நாம் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்.ஹெச். 370
விமான கேப்டன் கடைசியாக அதிகாலை 1.19 மணிக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். ஆனால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன மையத்தில் இருந்து யாரோ அதிகாலை 2.35 மணிக்கு கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகர ஊழியர்களை தொடர்பு கொண்டு மலேசிய விமானத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தகவல்
மலேசியன் ஏர்லைன்ஸ் மையத்தில் இருந்து விமானத்திற்கு தப்புத் தப்பாக டைப் செய்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராடாரில் பார்க்க முடியாததால் ஹோ சி மின் நகரில் புகார் அளித்துள்ளனர். உடனே அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று விமானத்திற்கு அனுப்பிய தகவல் அதை சேரவே இல்லை.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications