மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது: தற்போதைய தகவல்கள்
பெய்ஜிங்: மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மாயமாக தாங்கள் தான் காரணம் என்று சீனாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி 239 பயணிகளுடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 சீனாவுக்கு சென்றது. அந்த விமானம் சீன கடற்பகுதியில் மாயமானது. விமானம் என்ன ஆனது, அதில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது அதை தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் விமானம் மாயமானதற்கு தாங்கள் தான் காரணம் என்று சீனாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான சைனீஸ் மார்டயர்ஸ் பிரிகேட் இமெயில் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த அமைப்பு பொய் சொல்லக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

மாயமான விமானத்தில் இரண்டு பேர் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்தது. அதில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயது வாலிபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் எந்த ஒரு தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு நபரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க நியூசிலாந்து அரசு அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தான பி-3 ஓரியான் என்ற விமானத்தை அனுப்பி வைக்கவிருக்கிறது.
இதற்கிடையே மாயமான விமானம் வெடித்துச் சிதறியதா என்பதை கண்டறியும் முயற்சியில் அணு ஆயுத சோதனை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications