மலாக்கா ஜலசந்தியில் மிதந்த சூட்கேஸ்கள்: மாயமான விமான பயணிகள் உடையதா?

Subscribe to Oneindia Tamil

செபாங்: மலேசிய விமானம் மாயமானதாக கூறப்படும் மலாக்கா ஜலசந்தியில் சூட்கேஸ்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. அந்த விமானம் மாயமானது. விமானம் சீனா சென்று திரும்பி வந்து மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ராவுக்கு இடையே உள்ள மலாக்கா ஜலசந்தியில் பறந்தது ராடாரில் கண்டுபிடிக்கப்பட்டது.

MISSING MH370: Debris found at Straits of Malacca

இதையடுத்து விமானம் மலாக்கா ஜலசந்தியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் மலாக்கா ஜலசந்தியில் ஏதாவது மிதந்து வருகிறதா என்பதை பார்க்க கப்பல் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த கப்பல் ஜலசந்தியில் சூட்கேஸ்கள் மிதப்பதை கண்டுள்ளது. இதையடுத்து சூயஸ் கால்வாய் நோக்கி சென்ற எல்கா ஏதினா என்ற படகு நிறைய பொருட்கள் மலாக்கா ஜலசந்தியில் மதிப்பதாக இந்தோனேசிய அதிகாரிகளுக்கு ரேடியோ மூலம் தகவல் கொடுத்தது.

இந்த பொருட்கள் மாயமான விமானத்தில் பயணித்தவர்களுடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+