பேஸ்புக்கில் தகவல் சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகி!
டாக்கா: வங்கதேசத்தில் காதல் விவகாரத்தில் விரக்கி அடைந்த மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் பதிவு போட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சபிரா ஹுசைன் (21) என்பவர் மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர், மார்கெட்டிங் என பல்வேறு வேலைகள் செய்துவருகிறார். அவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், எனது தற்கொலைக்கு காரணம் தனது காதலன் நிர்ஜார் தான் என தெரிவித்துள்ளார். சபிரா ஹுசைன், காதலன் நிர்ஜார் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென சபிரா ஹுசைனை திருமணம் செய்ய அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சபிரா ஹுசன் தனது அபார்ட்மென்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அபார்ட்மன்டில் இருந்து சபிரா ஹுசனின் உடலை போலீசார் மீட்டனர். இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.