சீனாவில் திடீரென வேகம் காட்டும் கொரோனா... 20,000 பேர் தனிமை முகாமுக்கு மாற்றம்!
பீஜிங்: சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் திடீரென அதிகரித்து வருகிறது.
அங்குள்ள கச்செங் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னெச்சிரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சீனாவில் 242 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் இறந்து உள்ளார்.

அவசர நிலை பிரகடனம்
சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள கச்செங் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னெச்சிரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய் தவிர்ப்பு
புதிய தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் வைரஸுடனும் இல்லாமலும் உள்ளவர்களிடையேயான தொடர்புகளிலிருந்து புதிய தொற்றுநோய்களைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிகின்றன.

இரண்டாவது டோஸ்
தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முதல் இறப்பு
சுமார் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணம், சமீபத்தில் உருமாறியுள்ள புதிய வீரியம் மிக்க கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது சீனாவில் 242 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications