80-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்.. நள்ளிரவில் குலுங்கிய தைவான்.. பீதியில் உறைந்த மக்கள்
தைபே: தைவானில் அடுத்தடுத்து 80 க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடு தைவான். புவியின் 2 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் தைவான் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக தைவான் உள்ளது. இந்த நிலையில், தைவானில் திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர். அதிபகட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தலைநகர் தைபே உள்ளிட்ட இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பலரும் தீடிரென வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சியில் உறைந்தனர். ஹூலைன் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதே இடத்தில் தான் கடந்த 3 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 14 பேர் பலியாகினர்.
ஏப்ரல் 3 ஆம் தேதியில் இருந்தே அங்கு தொடர்ந்து அதிர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், நள்ளிரவில் சக்திவாய்ந்த 6.2 என்ற அளவில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சில இடங்களில் மட்டும் கட்டிடங்கள் லேசான சேதம் அடைந்து இருப்பதாகவும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தைவான் அதிகாரிகள் கூறினர்.
தைவானில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல், 1999-ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு மிக சக்தி வாய்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.












Click it and Unblock the Notifications