இழப்புகளை சந்திப்பீர்கள்.. அதிர்ச்சியை தாங்க முடியாது.. இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.. என்ன திமிர்!
பெய்ஜிங்: இந்தியா பெரிய இழப்புகளை சந்திக்கும், இந்தியாவால் இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. முதல் முறையாக சீனா எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனை மோசம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதனால் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இந்த பிரச்சனையில் மத்தியசம் பேச விருப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் இதை சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுமே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன மறுப்பு
இந்த நிலையில் இந்தியாவிற்கும் சீனா தற்போது கடுமையான எச்சரிகைகளை விடுத்துள்ளது. அதில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சண்டையில் சிலர் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இது போன்ற பேச்சுக்கள் தவறானது. இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவை தவறாக வழி நடத்தும்.

இந்தியாவிற்கு எதிரானது
இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவின் கொள்கைக்கு எதிரானது என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவுடன் சேர்ந்ததால் இந்தியாவிற்கு எதுவும் கிடைக்காது. இந்தியாவிற்கு பெரிய அளவில் இழப்புகள் தான் ஏற்படும். இதனால் பிரதமர் மோடியின் அரசு இந்த பிரச்னையை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வேண்டும். இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

சேர கூடாது
அமெரிக்கா, சீனா பிரச்சனையில் இந்தியா தலையிட கூடாது. இந்தியா இப்படி தலையிட்டால், அது பிரச்சனையை பெரிதாக்கும். அதோடு இந்தியாவிற்கு சிக்கலாக முடியும். அமெரிக்காவின் மத்தியசம் இதில் தேவை இல்லை. சீனா , இந்தியா இடையிலான பிரச்சனையை நாம்தான் சரி செய்ய வேண்டும். நமக்கு அந்த பலம் இருக்கிறது. அமெரிக்காவை இதில் உள்ளே அனுமதிக்க கூடாது.

அதிர்ச்சி தாங்க முடியாது
இந்தியாவில் ஏற்கனவே பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்தியாவால் மேலும் அதிர்ச்சிகளை தாங்க முடியாது. அமெரிக்காவுடன் இந்தியா இணைவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவும் - சீனாவும் அண்டை நாடுகள். நாம் ராஜாங்க ரீதியாக பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் . அதை விடுத்து தேசிய கொள்கைக்கு எதிராக அண்டை நாடுகளை எதிர்க்க கூடாது, என்று சீனா கூறியுள்ளது .
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications