ஜெர்மனியில் புத்தாண்டை கொண்டாட போய் செக்ஸ் தொல்லைக்கு ஆளான பெண்கள்
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள கலோன் நகரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தங்களுக்கு செக்ஸ் தொல்லை அளிக்கப்பட்டதாக மேலும் பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள கலோன் நகரில் இருக்கும் பிரபல தேவாலயம் அருகே கடந்த வியாழக்கிழமை இரவு புத்தாண்டை வரவேற்க ஏராளமானோர் கூடினர். அப்போது அரபு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் ஆண்கள் அங்கு வந்துள்ளனர்.

அதில் சிலர் தனியாக வந்த பெண்களுக்கு செக்ஸ் தொல்லை அளித்ததுடன் அவர்களின் உடைமைகளை பறித்துக் கொண்டு ஓடினர். ஆனால் போலீசாரோ புத்தாண்டு கொண்டாட்டம் அமைதியாக நடந்ததாக மறுநாள் தெரிவித்தனர். வார இறுதிநாட்களில் தான் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி சில பெண்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை வரை 90 பெண்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 16 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கலோன் போலீசாரின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோப் கைல்ஸ் கூறுகையில்,
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் ஜோடியாக வந்திருந்தனர். இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக 10 போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்குகளில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications